Change the Font size

Friday, February 17, 2012

ஜெல்லி மீன்களுடன் நீச்சலடிக்க விரும்பும் சுற்றுலாப்பயணிகள்

கடற்கரைகளுக்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் டொல்பின்களுடன் நீந்தி விளையாடுவதற்கு அதிகம் ஆசைப்படுவார்கள். தற்போது அனேகமான சுற்றுலாப்பயணிகள் ஜெல்லி மீன்களுடன் சேர்ந்து நீச்சலடிப்பதற்கு பெரிதும் விரும்புகின்றனர்.
மேலும் இதற்குக் காரணம் ஜெல்லி மீன்கள் மிகவும் மிருதுவானதாக காணப்படுவதுடன் மனிதனுக்கு எள்ளளவும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பதாகும்.
இதற்காக பலாயூ எனும் ஏரி பிரபல்யமடைந்து வருகின்றது. இங்கு ஏறத்தாழ 8 மில்லியன் அளவிலான ஜெல்லி மீன்கள் காணப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.

எனினும் ஜெல்லி மீன்களை உணவாக பயன்படுத்த முடியாத அளவிற்கு அவை நச்சுத்தன்மை வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment